யாழில். 19ஆயிரத்து 200 குடும்பங்கள் பாதிப்பு..!!!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 5 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 19ஆயிரத்து 200 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டி.என் சூரியராஜா தெரிவித்தார்.

தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த சீரற்ற காலநிலை காரணமாக, 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, நல்லூர், தெல்லிப்பழை , சங்கானை, காரைநகர், , கோப்பாய், சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம், உடுவில், நெடுந்தீவு ,கரவெட்டி, வேலணை, மருதங்கேணி ,பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here