யாழ்ப்பாண வெள்ள அனர்த்த நிலவரம்..!!!


யாழ்ப்பாண ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த 7010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 265 குடும்பங்களைச் சேர்ந்த 928 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 215 குடும்பங்களைச் சேர்ந்த 901 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here