யாழில். மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மக்கள் அஞ்சலிக்காக நாளை திறப்பு..!!!




யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் நாளை (23) மாலை 6 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமானது . எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடரபில் ‘ 1982 கார்த்திகை 27 முதல் 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் கிடைக்கபெற முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கிய நினைவாலயம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் , கடந்த வருடம் முல்லைத்தீவு, நல்லூர் ஆகிய பிரதேசங்களில் எம்மால் அமைக்கப்பட்ட நினைவாலயங்களில் தங்களுடைய பிள்ளைகளின் பெயர்கள் தவறவிடப்பட்டதாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் பதியப்பட்டவர்களின் கல்லறைகளையும் கொண்டதாக இம்முறை நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோர்கள், உறவினர்கள் தங்கள் பிள்ளைகளின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதோடு , அனைவரும் வருகை தந்து உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Put your ad code here

Previous Post Next Post