பத்தரமுல்லயிலிருந்து கொஸ்வத்த நோக்கிப் பயணித்த சொகுசு காரொன்று இன்று (22) திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீவிபத்தின்போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லையெனவும், கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news