நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு..!!!


புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. இராமநாதன் அர்ச்சுனா, சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சிவில் செயற்பாட்டாளர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று (21) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.

இதனையடுத்து நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து எம்.பி.யிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என்று தெரிவித்தபோதும் அருச்சுனா ஆசனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்.

யாழ்.மாவட்டத்திலிருந்து சுயேட்சைக்குழு இல.17ஐ பிரதிநிதித்துவப்படுத்தி இராமநாதன் அர்ச்சுனா நடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி நாடாளும்ன்றில் நடந்துகொண்ட விதம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்டது.

இது குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் அரகலய போராட்டத்தின் உறுப்பினர்களும் , சட்ட வல்லுநர்களும் முறைப்பாடொன்றை முன்வைத்தனர். இதன்போது கருத்து தெரிவித்த முறைப்பாட்டாளர்கள்,

வைத்தியர் அர்ச்சுனாவின் செயலானது இலங்கை அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் முரணானது. அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டோம்.

இதுபோன்ற செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் கண்டிக்கப்பட வேண்டும். ஆகவே சபாநாயகர் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here