யாழில். பிள்ளைகள் கணவனை விட்டு வேறு ஆணுடன் சென்ற பெண் விளக்கமறியலில்..!!!



மூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த 04 , 06 மற்றும் 10 வயதுடைய மூன்று பிள்ளைகளையும் , கணவனையும் விட்டு பிரிந்து , வேறு ஒரு ஆணுடன் கீரிமலை பகுதியில் அப்பெண் வசித்து வந்துள்ளார்.

அது தொடர்பில் பெண்ணின் கணவரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் அப்பெண்ணை கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்தினர்.

அதனை அடுத்து அப்பெண்ணை எதிர்வரும் வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here