யாழில் இருந்து சென்ற பேருந்தில் கழன்று ஓடிய முன்சில்லு; தவிர்க்கப்பட்ட பேரனர்த்தம்..!!!


இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின், ஒருபக்க முன்சில்லு கழன்று ஓடியதால், விபத்துக்குள்ளான சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி ,இன்று (27) காலை சென்ற பஸ்ஸே, இயக்கச்சி இராணுவ முகாம் முன்பாக விபத்துக்குள்ளாகியது.

இ.போ.ச பஸ்ஸின் சாரதி பக்க சில்லின் அச்சு உடைந்து, சில்லு தீப்பிடித்து சென்றதில், அருகில் பயணித்த பட்டா வாகனத்தின் மீது பஸ்ஸின் சில்லு மோத, பட்டா சாரதி நிலைகுலைந்து, பட்டாவும் விபத்துக்குள்ளாகியது.

இந்நிலையில் இ.போ.ச பஸ் சாரதியின் சாமர்த்தியத்தால், பஸ் குடை சாயாமல் நிறுத்தப்பட்டு சேதங்கள் தடுக்கப்பட்டன.



Previous Post Next Post


Put your ad code here