யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு ..!!!





யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.

அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா (வயது - 32) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வீட்டிலிருந்த போது அவர் திடீர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டநிலயில் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்ள்ளார். நெல்லியடிப் பொலஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Put your ad code here

Previous Post Next Post