பிறை தென்பட்டது - நாளை ரமழான் பண்டிகை..!!!


இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்பட்டுள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு சற்றுமுன்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.

அதன்போதே, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளைய தினம் ரமழான் பண்டிகையை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாகி அறிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here