நாட்டில் தொடரும் கனமழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களின் காரணமாக கொழும்பு மாவட்டத்தின் 245 குடும்பங்களைச் சேர்ந்த 1,321 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையின் காரணமாக கொழும்பு மற்றும் ஹோமாகம பிரதேசங்களில் உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த மாவட்டத்தில் 03 வீடுகள் முழுமையாகவும், 239 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Tags:
sri lanka news