யாழில். 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி 32 வயதுடைய நபர் கைது..!!!



யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி

கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமான நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பில் வைத்தியர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் சிறுமியை நீண்ட காலமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
Previous Post Next Post


Put your ad code here