யாழில். IPL பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் IPL போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் (வயது-26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இளைஞன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு உணவருந்திவிட்டு தொலைக்காட்சியில் IPL கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறிய நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து வரை வீட்டார் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இருதய அறைக்குள் இரத்த கசிவு ஏற்பட்டமையால் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here