மஹேசி விஜயரத்ன சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் நீண்டகாலமாக நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணராக வேலை செய்பவர்.
இவர்தான் துமிந்த சில்வா, ஹிருணிக்காவின் அப்பாவை கொலை செய்த சூட்டு சம்பவத்தில் காயப்பட்டு வைத்தியசாலையில் இருந்தபோது மருத்துவம் பார்த்து, அவர் பற்றிய ரிப்போர்ட்டை நீதிமன்றுக்கு வழங்கியவர். அவர் வழங்கிய ரிப்போர்ட் சம்பந்தமாகவும் பலத்த சந்தேகத்தை பலர் வெளியிட்டிருந்தனர்.
அவரும் அவரது உதவியாளர் ஒருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் பல மடங்கு அதிக விலைக்கு அவரது நோயாளிகளுக்கு விற்பனை செய்துள்ளார் என்பதே அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.
நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரான அவர், மூளை சம்பந்தப்பட்ட சத்திர சிகிச்சைகளை செய்பவர்.
அதற்கு தேவையான உபகரணங்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.
ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை அரசு - சுயாதீன (தனியார்) கூட்டு வைத்தியசாலை. அந்த வைத்தியசாலையின் நிர்வாக குழுவின் வைத்தியராகவும் அவர் உள்ளார்.
அங்கே மருத்துவம் பெறும் நோயாளிகள் எல்லோரும் பணம் செலுத்த வேண்டும்.
அதனால் அந்த உபகரணங்களை இலகுவாக வைத்தியசாலையே கொள்வனவு செய்து நோயாளிகளுக்கு நியாயமான விலையில் கொடுக்கலாம். ஆனால் வைத்தியசாலை நிர்வாகக் குழுவில் இருந்த வைத்தியர் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல், தான் பணம் சேர்ப்பதற்காக மாற்று வழியை கையாண்டுள்ளார்.
தனது கணவனின் பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்து தனது நோயாளிகளுக்கு அந்த கம்பெனி ஊடாக குறித்த உபகரணத்தை விற்பனை செய்துள்ளார்.
வைத்தியசாலையில் அட்மிட் ஆகும் நோயாளிக்கு சத்திர சிகிச்சை தேவை என்றால், வைத்தியசாலை உத்தியோகத்தர் ஊடாக நோயாளியின் உறவினர்களிடம் வைத்தியரின் கணவனின் கம்பெனியின் தொடர்பு இலக்கம் வழங்கப்படும்.
விடயமறியாத நோயாளிகளும் அந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உபகரணத்தை வாங்குவார்கள்.
30 ஆயிரம் பெறுமதியான உபகரணத்தை அவர்கள் 1,20,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
அந்த உபகரணம் வாங்குவதற்கான பிரிஸ்கிரிப்ஷன்கூட வழங்கப்படவில்லை. அவ்வாறு பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்தால் வேறு இடங்களில் அவர்கள் குறைந்த விலையில் வாங்கியிருக்கலாம்.
அதைத் தடுக்க வாய் வழியாக சொல்லி, தொடர்பு இலக்கை மட்டும் கொடுத்து உயர்ந்த விலைக்கு உபகரணங்களை விற்பனை செய்து ஏமாற்றியுள்ளனர்.
அரசாங்க வைத்தியசாலை ஊடாக நியாயமான விலையில் விற்பனை செய்வதை தவிர்த்ததன் மூலம், 30 மில்லியன் ரூபாய்க்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக வைத்தியர் மஹேசியினால் சத்திர சிகிச்சை செய்யப்பட்ட 75 பேர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு தனது கணவனின் கம்பெனி ஊடாக அதிக விலைக்கு உபகரணங்களை விற்பனை செய்ததை தவிர, அவர் சத்திர சிகிச்சை தேவையில்லாத நோயாளிகளுக்கும் பணத்திற்காக சத்திர சிகிச்சையை பரிந்துரைத்ததாக சமூக ஊடகங்களில் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்கிறார்கள்.
இது உறுதிப்படுத்தப்படாத தகவல். ஆனால் அவர் அவ்வாறு செய்திருந்தால், அது கெஹலிய போலி மருந்துகளை இறக்குமதி செய்ததைப் போல பாரதூரமான செயலாகும்.
இது சம்பந்தமாக வைத்தியர் மஹேசியினால் சத்திர சிகிச்சை செய்யப்பட்ட 75 பேர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு தனது கணவனின் கம்பெனி ஊடாக அதிக விலைக்கு உபகரணங்களை விற்பனை செய்ததை தவிர, அவர் சத்திர சிகிச்சை தேவையில்லாத நோயாளிகளுக்கும் பணத்திற்காக சத்திர சிகிச்சையை பரிந்துரைத்ததாக சமூக ஊடகங்களில் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்கிறார்கள்.
இது உறுதிப்படுத்தப்படாத தகவல். ஆனால் அவர் அவ்வாறு செய்திருந்தால், அது கெஹலிய போலி மருந்துகளை இறக்குமதி செய்ததைப் போல பாரதூரமான செயலாகும்.
வைத்தியர் மஹேசிக்கு முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் பலத்த அரசியல் செல்வாக்கு இருந்ததாக நம்பப்படுகிறது.
அந்த அரசியல் பலத்தையே வைத்துக் கொண்டு அவர் துணிந்து இந்த செயல்பாடுகளை செய்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு வைத்தியர் மஹேசி ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண்ணோடு வாக்குவாதம் போட்டு, கண்ணாடி பாட்டிலை உடைத்து, அந்த பெண்ணை கடுமையாக தாக்கியதால், அந்தப் பெண் சத்திர சிகிச்சைக்கு உட்பட்டிருந்தார்.
ஆனால் அந்த விசாரணை முன்னைய அரசின் அழுத்தத்தினால் இடைநிறுத்தப்பட்டு, அவர் காப்பாற்றப்பட்டார் என்ற செய்தியும் உள்ளது.
வைத்தியர் மஹேசியிடம் சத்திர சிகிச்சை பெற்ற நோயாளிகளிடம் வாக்குமூலம் பெற இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் மூளை மற்றும் நரம்பு சம்பந்தமான சத்திர சிகிச்சை செய்தவர்கள் வாக்குமூலம் வழங்க விரும்பினால், கீழே உள்ளவற்றில் ஒன்றின் மூலம் தொடர்பு கொள்ள முடியும்:
Hotline – 1954
E-mail – ciaboc_gen@ciaboc.gov.lk
தமிழ் சந்தி
Tags:
sri lanka news