யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை..!!!


யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்து வருவதை அவதானிக்க முடிகின்றது

குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை. மக்களே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில் - வடக்கு மாகாணத்தில் எரிபொருள் இருப்பில் இருக்கின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமைபோன்று செயற்பட்டு எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று போதியளவு எரிபொருள் இருக்கின்றது. செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ப்பதற்ற சூழல் எரிபொருளின் விநியோக தளம்பலை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது..



Previous Post Next Post


Put your ad code here