அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?




அஜித் நடித்த 'வாலி' திரைப்படம் தான் எஸ்.ஜே. சூர்யாவுக்கு முதல் படம் மட்டுமின்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த படத்திற்கு பிறகு அஜித்தும் எஸ்.ஜே. சூர்யாவும் வேறு எந்த படத்திலும் இணையவில்லை.

இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இந்த நிலையில், "ஆதிக் இடம், எனக்கு ஒரு கேரக்டர் அந்த படத்தில் கொடுங்கள்" என்று எஸ்.ஜே. சூர்யா கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே. சூர்யா, கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக இருந்தாலும், அஜித்துடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை கேட்டு உள்ளார். ஏற்கனவே விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படத்தை ஆதித் இயக்கியதால், ஆதிக்கும் எஸ்.ஜெ. சூர்யாவிற்கும் நல்ல நட்பு உள்ளது.

அந்த நட்பை பயன்படுத்தி, அஜித்தின் அடுத்த படத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படியே வாய்ப்பு கொடுத்தாலும், அதற்கு அஜித் ஒப்புக்கொள்வாரா என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
Previous Post Next Post


Put your ad code here