தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கும்… குபேரா இயக்குனர் சேகர் கமுலா நம்பிக்கை..!!!




நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து ஜூன் 20 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

நேற்று சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அப்போது பேசிய படத்தின் இயக்குனர் சேகர் கமுலா “குபேரா படம் நல்லா வந்துருக்கு. படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவரைத் தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியாது. அவருக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். குபேரா திரைப்படம் அரசியல் கதையாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here