காணாமல்போன வங்கி அதிகாரி மொனராகலை, பிபில, யல்கும்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.
பிபில, யல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வங்கி அதிகாரி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பதுளை பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில், பின்னர் வேலை நிமித்தம் கொழும்பு பிரதேசத்திற்கு செல்வதாக கூறிவிட்டு தாயின் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
வீட்டிலிருந்து வெளியே சென்ற வங்கி அதிகாரியிடம் இருந்து எந்தவித தகவல்களும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வங்கி அதிகாரியின் தாய்க்குச் சொந்தமான பிபில, யல்கும்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து வங்கி அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் பிபில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news