நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்..!!!


நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று(14) முதல் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறியுள்ளது.

அதோடு 16-ம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here