இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!!!


இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளது.

கேரளா, மகாராஷ்ட்ரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் 1,147 பேரும் மகாராஷ்ட்ராவில் 424 பேரும் டெல்லியில் 294 பேரும் தமிழகத்தில் 148 பேரும் குஜராத்தில் 223 பேரும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 07 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post


Put your ad code here