வீட்டின் கூரையில் மோதிய பேருந்து..!!!


ஹங்குரன்கெத்த பகுதியில் இன்று (14) காலை 6.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மலுல்ல பகுதியில் உள்ள ஹங்குரன்கெத்த - அதிகரிகம வீதியில் லிசகோஸ் அருகே ஒரு வீட்டின் ஒரு பகுதியில் பஸ் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் ஹங்குரன்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here