இந்தியாவில் ஆறு பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: அனைவரும் பலி..!!!


இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று காலை இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதை தொடர்ந்து, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உத்தரகாண்ட் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏடிஜி) முருகேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதில் விமானி உள்ளிட்ட ஆறு பணிகள் (ஐந்து பெரியவர்கள் ஒரு குழந்தை) மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் மேல் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய புனிதத் தலமான கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை தேடும் மற்றும் மீட்புப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த விமான விபத்து காரணமாக இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here