திருகோணமலையில் நிலநடுக்கம்..!!!


திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை கடற்கரையில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. திருகோணமலை கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் வியாழக்கிழமை (18) 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

GSMBயின் நில அதிர்வு கண்காணிப்பு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருகோணமலையிலிருந்து வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் உள்ள கடலில் இன்று உள்ளூர் நேரப்படி மாலை 4.06 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகாகனதராவ, ஹக்மான, பல்லேகலே மற்றும் புத்தங்கல ஆகிய இடங்களில் அமைந்துள்ள நாட்டின் நான்கு நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை என்றும், கடற்கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here