கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லும்போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் அநுராதபுரத்திற்கு அண்மையில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள் ளது.
இதில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இவ் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்துச் சம்பவத்தில் மேலும் ஒரு வயோதிபப் பெண்ணும் உயிரிழந்துள்ளார்.