2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு: வரலாற்றிலேயே அதிக வருமானத்தை ஈட்டியுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களம்..!!!


இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), இந்த ஆண்டு இதுவரை 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோரைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், 18,000 புதிய நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்ட, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 18% அதிகமாக வருவாய் ஈட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திணைக்களம் கடந்த வாரம் 2 ட்ரில்லியன் ரூபாயைத் தாண்டி, வரலாற்றிலேயே அதிகபட்ச வருவாய் வசூலை எட்டியுள்ளது என்றும் அவர் வெளிப்படுத்தினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பெர்னாண்டோ, “இதுவரை, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ரூபா 2,080 பில்லியனை வசூலித்துள்ளது,” என்று கூறினார்.
Previous Post Next Post


Put your ad code here