வவுனியாவில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு..!!!


வவுனியா வைத்தியசாலையில் கீழே விழுந்திருந்த ஒன்றரைப் பவுண் சங்கிலியை எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மருத்துவமனையின் பொலிஸ் காவல் மையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பொலிஸ் சர்ஜென்ட் திலகரதன என்ற அதிகாரி, வைத்தியசாலை சுற்றுப் பார்வையில் ஈடுபட்டிருந்த போது தரையில் விழுந்திருந்த தங்கச் சங்கிலி கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் அந்த அதிகாரி இது குறித்து செவிலியர் குழுவினருக்கு அறிவித்ததுடன், அந்தத் தங்கச் சங்கிலியை பொலிஸ் காவல் மையத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்.

இந்நிலையில், ஒரு பல்கலைக்கழக மாணவி தன் தாயாருடன் தன்னுடைய தங்கச் சங்கிலி விழுந்து விட்டதாக தேடி வந்த போது, மருத்துவமனை பொலிஸ் காவல் மைய அதிகாரிகள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் அந்தச் சங்கிலியை மீண்டும் அவருக்குக் கையளித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here