யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருநகர் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கும்பல் ஒன்று போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கும்பலை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமிருந்தும் ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , கும்பலின் ஏனைய வலையமைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
.jpeg)