காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் நேற்று(18) பயணித்த யாழ் தேவி புகையிரதத்தில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்தார். நல்லூர் பகுதியை சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.