யாழில். துவிச்சக்கர வண்டிகளை களவாடி வந்த கும்பல் கைது..!!!


யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர்

கைதுசெய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 12 சைக்கிள்களை மீட்டனர்

கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here