பயணிகளுடன் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கர வண்டியின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது திடீரென தீப்பற்றி எரிந்தது.
ஆயினும் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளும் சாரதியும் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டி தீப்பற்றி எரிந்த நிலையில் வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் முச்சக்கர வண்டியின் தீ பரவலை கட்டுப்படுத்தி ஓரளவு பாதுகாத்தனர்
குறித்த சம்பவம் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு அண்மித்த மருதங்கேணி- பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றது.
