யாழிலுள்ள பள்ளிவாசலுக்குள் வாளுடன் புகுந்த இளைஞன் - பொலிஸார் தீவிர விசாரணை..!!!


யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பள்ளிவாசலை அண்டிய பகுதியில் இரு இளைஞர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஒருவர் மற்றையவரை வாளால் வெட்ட முற்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடிய இளைஞன் , அருகில் இருந்த பள்ளிவாசல் ஊடாக தப்பியோடியுள்ளார். அதன் போது , குறித்த இளைஞனை வாளுடன் துரத்தி வந்த இளைஞனுடன் பள்ளிவாசலுக்குள் புகுந்த வேளை அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் , அங்கிருந்தவர்கள் வாளுடன் வந்த இளைஞனின் வாளினை பறிமுதல் செய்தனர்.

அதனை அடுத்து அங்கிருந்து குறித்த இளைஞனும் தப்பி சென்ற நிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை. அடுத்து பள்ளிவாசலுக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
Previous Post Next Post


Put your ad code here