நள்ளிரவு புதுப்பிக்கப்படும் QR..!!!


எரிபொருள் வழங்கும் QR குறியீட்டு நடைமுறை இன்று நள்ளிரவின் பின்னர் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் வாரத்திற்கான புதுப்பிக்கப்பட்ட QR குறியீட்டின் கீழ், நுகர்வோர் ஞாயிற்றுக்கிழமை முதல் எரிபொருளைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இன்று வாகன உரிமத் தகட்டின் கடைசி இலக்கத்தில் ஒற்றை எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்கள் மூலம் எரிபொருள் வழங்கப்படும்.

இந்தநிலையில் இன்று எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

எனினும் எரிபொருள் நிலையத்திலிருந்து விண்ணப்பம் பெறப்பட்டால், அந்த விண்ணப்பத்திற்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக, கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் இன்று அல்லது நாளை அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here