Monday, 3 February 2025

யாழில். அதீத போதை காரணமாக இளைஞன் உயிரிழப்பு..!!!

யாழில். அதீத போதை காரணமாக இளைஞன் உயிரிழப்பு..!!!


அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்

திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ் . போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்றும் , சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே , அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டது என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதையை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இன்றைய ராசிபலன் - 03.02.2025..!!!

இன்றைய ராசிபலன் - 03.02.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். நல்ல விஷயங்கள் துவங்குவதை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் இன்று கவனம் செலுத்தினால் போதும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். வண்டி வாகனம் ஓட்டும் போதும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். நினைத்த வேலைகள் எல்லாம் சரியான நேரத்தில் நடந்து முடியும். வேலையில் இருந்து வந்த இடர்பாடுகள் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நிதி நிலைமை சீராகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக முடியும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளை பொறுத்தவரை மனு அமைதி இருக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் பார்ட்னரோடு, சக வியாபாரிகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். கடன் தொகை வசூல் ஆகும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று நாள் கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களோடு நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலைகளை எல்லாம் சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுத்து நல்ல பெயரும் வாங்குவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயமும் பதட்டமும் இருக்கும். ஒரு வேலையை முழு ஈடுபாடோடு செய்ய முடியாது. இதனால் மேல் அதிகாரிகளோடு திட்டு வாங்க வேண்டிய வாய்ப்புகளும் உண்டாகும். வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மனக்கவலை இருக்கும். பிள்ளைகளைப் பற்றிய டென்ஷன் உண்டாகும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரவும் வாய்ப்புகள் உள்ளது. மனதை அலைபாய விடாதீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் மன ஒருமைப்பாடு இல்லை என்றால் பிரச்சனைகள் உண்டாகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நினைத்த பணம் கையை வந்து சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து சுகம் சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரமும் தொழிலும் வேலையும் நல்லபடியாக நடக்கும்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்கள் இன்று காலையிலிருந்து சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சோர்ந்து போகக்கூடாது. நேரம் பொன் போன்றதாக இருக்க வேண்டும்.‌இந்த நாள் அப்போதுதான் இனிய நாளாக அமையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்‌. நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றி தரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மன மகிழ்ச்சியை அடைவீர்கள். பொது பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் நினைத்ததை விட நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் முழு ஆர்வத்தையும் காட்டுவீர்கள். நல்ல பெயர் எடுக்க கடினமாக உழைப்பீர்கள். வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஜெயித்து காட்ட வேண்டும் என்ற குறிக்கோள் உங்களை வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுட கூடிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். வேலையில் சொன்ன சொல்லை காப்பாற்றி தலை நிமிர்ந்து நிற்பீர்கள். நடக்கவிருந்த பெரிய நஷ்டம் உங்களால் தவிர்க்கப்படும் பாராட்டுகளும் கிடைக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பணத்தை கடவுள் இனிமேல் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான். மேலதிகாரிகளுடைய ஆதரவோடு வேலையில் முன்னேறி செல்வீர்கள்.

Saturday, 1 February 2025

யாழில். சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த இராணுவ பங்களிப்புடன் வீதி தடைகள்..!!!

யாழில். சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த இராணுவ பங்களிப்புடன் வீதி தடைகள்..!!!


யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளையும் கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை , அல்லது காணிக்கான பெறுமதியை வழங்க முடியும்.

தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கோ , சுற்றுலாத்துறைக்கோ ஜனாதிபதி மாளிகையை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தையிட்டி விகாரை

யாழ்.மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அதன் போது , தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு , அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு , அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார்.

இருந்த போதிலும் , நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டவிரோதமான முறையில் மதில் காட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில் , சட்டவிரோதமான முறையில் , ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும். அது எந்த விதத்திலும் இந நல்லிணக்கத்திற்கோ , மாற்றத்திற்கோ ஏற்றதல்ல என தெரிவித்தார்.

யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன

பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன.

எனவே இந்த புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.

அதேவேளை யாழில் நேர அட்டவணைக்கு ஏற்ப 38 புதிய பேருந்துகள் தேவையாக உள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் சாலைக்கு 23 பேருந்துகளும், பருத்தித்துறை சாலைக்கு 10 பேருந்துகளும், காரைநகர் சாலைக்கு 05 பேருந்துகளும் தேவையாக உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. யாழில் 06 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன.

எனவே வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞைகளை அமைக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

மாவட்ட செயலரினால் பேருந்து தொடர்பில் கூறப்பட்டதற்கு, மார்ச் மாதமளவில் 10 புதிய பேருந்துகள் வழங்கவும் மேலும் 10 திருத்தி அமைக்கப்பட்ட பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது

30 ஆயிரம் வேலை வாய்ப்புக்கள் உள்ளன.

அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன. குறிப்பாக பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மொழி மூல பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதனால் பொலிஸ் வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும். தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைய வந்தால் 9 ஆயிரம் பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும்.

அதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளையோரை பொலிஸ் வேலையில் இணைய ஊக்கப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அச்சுவேலி - தொண்டமானாறு வீதி புனரமைக்க நடவடிக்கை.

அச்சுவேலி தொண்டமனாறு வீதியின் 7 கிலோ மீற்றர் வரையான தூரத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை சரியாக முழுமையாக செய்யாது திருப்பி அனுப்பப்படுவது வடக்கு மாகாணத்தில் அதிகமாக இருக்கின்றது. அதிகாரிகள் அரசியல் வாதிகளை கைகாட்டி நிதியை திருப்பியனுப்பும் நிலை கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் இனி அவ்வாறு இருக்க முடியாது.

எனவே யாழ் மாவட்டத்தில் உள்ள குறுக்கு வீதிகள் , புனரமைக்கப்படாமல் குறையில் காணப்படும் வீதிகள் என அனைத்து வீதிகளையும் புனரமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அத்துடன் மீன்பிடி இறங்கு துறைகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இராணுவத்தின் பங்களிப்புடன் வீதி தடைகள்.

வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது

அதன் போது , பொலிஸார் அதனை கட்டுப்படுத்துவதற்கு தமக்கு வாகன வசதி இல்லை என குறிப்பிட்டனர்.

அதனை அடுத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் வீதித் தடை, காவலரண்கள் அமைத்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது

வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்..!!!

வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்..!!!



தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்பட்டு பயணிகள் போக்குவரத்து, விசேட நோக்க வாகனங்கள், வணிக மற்றும் சரக்கு போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களின் இறக்குமதி தொடர்பாக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்கள், அரச நிறுவன விதிகளுக்கு உட்பட்டு அவசியமான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை 90 நாட்களுக்குள் பதிவு செய்யத் தவறினால் 3 சதவீத தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான வாகனத்தைப் பதிவு செய்வதற்கான செலவு, காப்பீடு மற்றும் கப்பல் கட்டணம் என்பவற்றில் 45 சதவீதத்தையும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாத்தல், அந்நியச் செலாவணியை இழந்து அதிக அளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதை ஊக்கப்படுத்தாமல் இருத்தல், அரச வருவாயை அதிகரித்தல் போன்ற நோக்கங்களுடன், நாட்டில் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் பின்வரும் நிபந்தனைகளை அறிவித்துள்ளது.

அதன்படி,

1. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்களில் பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளர்கள் இதன் மூலம் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்யலாம்.

2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறக்குமதியாளர்கள் தவிர மற்ற இறக்குமதியாளர்கள் 12 மாத காலத்திற்குள் ஒரு மோட்டார் வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்யலாம்.

3. இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு மோட்டார் வாகனமும் கொள்வனவாளரின் பெயரில் (பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளரிடமிருந்து வாங்கினால்) அல்லது
இறக்குமதியாளரின் பெயரில், குறிப்பிட்ட மோட்டார் வாகனம் தொடர்பான இறக்குமதி பில்லில்/சுங்கக் குறிப்பில் பதிவு செய்யப்பட்ட திகதியிலிருந்து 90 நாட்களுக்குள், மோட்டார் வாகனம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

4. மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு, இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) அடங்கிய பிரமாணப் பத்திரத்தை, மற்ற அனைத்து தேவையான ஆவணங்களுடனும், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், மேலே உள்ள பத்தி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர மற்ற இறக்குமதியாளர்கள், தங்கள் இரண்டாவது வாகனத்தை இறக்குமதி செய்யும்போது, தங்கள் முதல் வாகனத்தை இறக்குமதி செய்த நாளிலிருந்து 12 மாத காலத்திற்குள் வேறு எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்யவில்லை என்றும் அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். (சுங்கப் பதிவு திகதியிலிருந்து).

5. ஒரு இறக்குமதியாளர் 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யத் தவறினால், குறிப்பிட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மோட்டார் வாகனத்தின் விலை, காப்பீடு மற்றும் கப்பல் கட்டண பெறுமதி (CIF மதிப்பு) அதிகபட்ச வரம்பு 45% க்கு உட்பட்டு, இறக்குமதியாளர் மாதாந்திர CIF மதிப்பில் 3% தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

6. மாதாந்திர தாமதக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு எந்தச் சூழ்நிலையிலும் கட்டண விலக்கு அளிக்கப்படாது.

7. ஒரு மோட்டார் வாகனத்தின் வயதை நிர்ணயிப்பதில், மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்ட திகதிக்கும் சரக்குக் கட்டணம்/விமானப் பாதை மசோதா திகதிக்கும் இடைப்பட்ட காலம் கணக்கிடப்படும்

8. சலுகை வரிச் சலுகைகளின் கீழ் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிகளைப் பயன்படுத்தி எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அல்லது அனுமதிப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது.

9. ஏதேனும் மோட்டார் வாகனம் ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டால், தொடர்புடைய இறக்குமதியாளர் சுங்கப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அந்த மோட்டார் வாகனத்தை(களை) மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இன்றைய ராசிபலன் - 01.02.2025..!!!

இன்றைய ராசிபலன் - 01.02.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று நல்லது கெட்டதை நன்றாக புரிந்து கொள்வீர்கள். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதையும் புரிந்து கொண்டு, யார் யாரிடம் எப்படி பேசி பழக வேண்டுமோ அப்படி பேசி பழகுவீர்கள். நல்லது நடக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சி செய்யலாம். வேலையில் இன்னும் கொஞ்சம் ஆர்வம் காட்ட வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. குறித்த நேரத்தில் குறித்த வேலையை முடித்துக் கொடுப்பதே உங்கள் மரியாதையை பெற்றுக் கொடுக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வீட்டில் முதியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருந்தால் நல்லது. மற்றபடி வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதியான நாளாக இன்றைய நாள் அமையும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சந்தோஷம் வரும்போது மனது எப்படி ஏற்றுக் கொள்கிறதோ, அதே போல தான் தோல்வி வரும்போது துக்கம் வரும்போது கஷ்டம் வரும்போது, அதையும் மனது ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கஷ்டம் வந்தால் தான் இன்பத்தில் இருக்கும் சுகம் என்ன என்பது நமக்குத் தெரியும். அதை நீங்கள் இன்று புரிந்து கொள்ளுங்கள்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த போட்டி நிறைந்த நாளாக இருக்கும். மேலிடத்தில் வாக்குவாதம் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் மேலதிகாரிகளோடு கொஞ்சம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். வார்த்தையில் கவனம் இருக்கட்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. வியாபாரத்திலும் நிதானம் தேவை. வீட்டில் சொந்த பந்தங்களிடம் பேசும் போதும் கவனமாக இருக்கவும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த விளம்பரம் செய்யக்கூடிய வேலைகளை மேற்கொள்ளலாம். நீங்கள் நினைத்த வேலைகள் நல்லபடியாக நடந்து முடியும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷன் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வது நிம்மதியை கொடுக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கப் போறீங்க. வாக்கு கொடுத்து தவறிய இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்றி இருப்பீர்கள். என்னாலும் முடியும் என்பதை நிரூபிக்க கூடிய நாள் இது. உங்களுடைய தாழ்வு மனப்பான்மை நீங்க கூடிய நாளாகவும் இருக்கும். நிறைய மன மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் கொஞ்சம் பயம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற பதட்டங்கள் இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. உற்சாகத்திலும் குறைபாடு ஏற்படும். கவலைப்படாதீங்க, உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். மனதில் இருக்கும் கவலைகளை மனதிற்கு பிடித்தவர்களிடம் ஷேர் செய்யுங்கள். நல்லது நடக்கும். அதற்காக பிரச்சனைகளை ஊரெல்லாம் சொல்லக்கூடாது ஜாக்கிரதை.

விருச்சிகம்


விருச்சக ராசி காரர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் இந்த ஒரு விஷயம் கிடைத்தால் போதும் என்னுடைய வியாபாரத்தை நான் விரிவுபடுத்துவேன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த ஒரு நல்ல விஷயம் நடக்கும். இன்று கொஞ்சம் கூடுதலாக முயற்சி செய்யுங்கள். வங்கியில் லோன் எடுப்பது வாடகைக்கு இடம் பார்ப்பது அல்லது புதுசாக வண்டி வாகனம் வாங்குவது இதுபோல வியாபாரத்திற்கு என்ன தேவையாக இருந்தாலும் அதை இன்று முயற்சிக்கலாம். நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய பேச்சுக்கள் மீண்டும் நடக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகளும் ஏற்படும். வேலையில் கொஞ்சம் கூடுதல் டென்ஷன் இருக்கும். தலை மேல் நிறைய வேலையை சுமக்க கூடிய சந்தர்ப்பங்களும் வரும். அன்றாடம் செய்யக் கூடிய வேலையை விட அன்றாடம், போடக் கூடிய உழைப்பை விட கூடுதலாக இன்று உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து தோல்வி அடைந்த காரியங்களை இன்று முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கையை வந்து சேரும். முதலீடு செய்வதாக இருந்தால் செய்யலாம் வங்கியில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். தங்க நகை வாங்கி வைக்கலாம். நிலத்தில் பணத்தை போடலாம். நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று கடவுள் சில பல டெஸ்டிகளை வைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் நல்லவர்களா என்று சோதித்துப் பார்க்கக் கூடிய தருணம் வரும். சோதனை காலம் வரும். இன்று அந்த சோதனையை நீங்கள் கடக்க வேண்டிய சூழ்நிலை வரும். எவ்வளவு தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், கெட்ட விஷயத்திற்கு துணை போகாதீர்கள். கோடி ரூபாய் கிடைத்தாலும் குறுக்கு வழி வேண்டாம். ஒரு ரூபாய் கிடைத்தாலும் நேர்வழியில் பயணம் செய்யுங்கள். உங்களுக்கான நல்லது உங்களைத் தேடி வரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ வாழ்வு தான். நீண்ட நாள் பண பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் பெருகும். மனைவிக்கு பிள்ளைகளுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்யப் போகிறீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேற போகிறது. சந்தோஷம் அதிகமாகும் போது தான் தவறுகளும் அதிகமாகும். மனதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டால் இன்று அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

Friday, 31 January 2025