பேஸ்புக் காதலியை பார்க்கச்சென்ற இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளது.
கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று மாலை இச் சம்வம் இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:
ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் போஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு உரையாடிவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் இருவரும் யாழ்.இராமநாதன் வீதியில் சந்திப்பதாக பேசிக் கொண்டுள்ளனர்.
இதன்படி குறித்த இளைஞர் இருவரும் பேசிவைத்து நேரத்திற்கு அங்கு வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் அங்கு வரவில்லை.
இந்நிலையில் அப்பகுதிக்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் தாங்கள் பொலிஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், குறித்த இளைஞரை விசாரிக்க வேண்டும், அதனால் தங்களுடன் வருமாறு கூறி மோட்டார் சைக்கில் இழுத்து ஏற்றி கொக்குவில் பெற்பதி வீதிக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அந்த கும்பல் குறித்த இளைஞரை தாக்கியதுடன் அவரிடம் இருந்த கைத்தொலைபேசி மற்றும் பணத்தினை பறித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னால் விழுந்தமையினால் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இரத்தம் வழிந்தவாறு அப்பகுதியில் இளைஞர் உதவியுடன் யாழ். வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்வபவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.