அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக போராட்டம்..!!!


யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இதன்போது ஆளுநரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பாடசாலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களை இடமாற்றம் செய், தமிழர் ஆசிரியர் சங்கமே தவறான ஆசிரியர்களை தவறாக வழிநடத்தாதே, வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளே ஊழல் புரிவோரை பாதுகாக்காதே, வலயக்கல்விப் பணிப்பாளரே ஆசிரியர்களை தூண்டி அரசியல் செய்யாதே, மாணவர்களின் உணவுப் பொருட்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைவாக தீர்வினை வடக்கு மாகாண ஆளுநர் பெற்றுத்தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அத்தோடு, போராட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஆளுநர் செயலகத்தில் கையளித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here