வவுனியாவில் முச்சக்கரவண்டி தீக்கிரை..!!!


வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சகரவண்டியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தீயிட்டு எரித்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்..

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here