அதிக வெப்பத்தினால் கண்களுக்கு பாதிப்பு : கண் நோய் நிபுணர்கள் எச்சரிக்கை..!!!


தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கண் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வெளியில் செல்லும்போது கண்ணாடிகளை பயன்படுத்துமாறு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் நோய் நிபுணர் முதிதா குலதுங்க கோரியுள்ளார்.

வெப்பம் காரணமாக கண் பார்வைக்கான பகுதியில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமாயின் சிறிய எழுத்துக்களை பார்ப்பதில் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இதுவரை கண் நோயாளர்களின் பதிவில் அதிகரிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் 19 கட்டுப்பாடுகளுடன் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதால் கண் நோய் பரவுதல் குறைவடைந்துள்ளதாகவும் விசேட கண் நோய் நிபுணர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிக வெப்பநிலை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here