இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வழிப் போக்குவரத்து சட்டம் நீக்கப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஸ் வண்டிகள் பயணிக்கின்ற வீதிப்பிரிவிலேயே முச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிளும் பயணிக்க வேண்டும் என்கிற சட்டம் அறிவிக்கப்பட்டது.
எனினும் இது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் இந்த சட்டத்தை வாபஸ் பெற அரசாங்கம் எண்ணியுள்ளது என்று கூறப்படுகிறது.
மக்களிடம் இருந்து கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்து இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.