வன்னி வாழ் அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு..!!!


மழைக்காலத்தின் முன் பாலங்களை புனரமைத்துத் தாருங்கள்  ஊர் மக்கள் கோரிக்கை.
 
அபிவிருத்தி என்ற போர்வையில் பிரதான வீதிகள் மட்டுமே புனரமைக்கப்படுகின்றன. வருடக்கணக்கில் பல்வேறு பட்ட விதத்தில் பலரிடம் கோரிக்கை முன் வைத்தும் எமது போக்குவரத்துப் பாதைகள் புனரமைக்கப்படவில்லை.
உள் வீதிகள் எல்லாம் இன்னும் பள்ளமும் திட்டியுமாக பயணிக்கமுடியவில்லை. நீரோடும் பாலங்கள் உடைந்து கொட்டிப் போய் கிடக்கு.அவசரம் என்றால் ஆட்டோ கூட வரமுடியாத நிலை.  உடைந்து போன பாலங்களின் மீது எவ்வாறு பயணிக்க முடியும் வேறு பாதைகளை பயன்படுத்துவதும் சிரமம். இனி மழைக்காலம். இன்னும் நெருக்கடி நிலைகளை நாம் அனுபவிக்கும் நிலை வரும். ஒவ்வொரு மழைக்கும் நிவாரணம் என்று பாணும் அரிசியும் கொடுப்பதோடு எம் பிரச்சனைகள் தீரப்போவதில்லை. அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதிகள் யாருமே எம் நிலைபற்றி விளங்கிக் கொள்ளவில்லை என தெரிவிக்கும் மக்கள் தமது போக்குவரத்துப் பாதையினை சீர் செய்து பாலங்களை புனரமைத்து தரும்படி கிளிநொச்சி 8ஆம் வாய்க்கால் மக்கள்   கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேரடிக்களத்திலிருந்து
யாழ்.தர்மினி.









 

Previous Post Next Post


Put your ad code here