கம்பஹாவில் பெண்ணொருவருக்கு கொரோன : 55 பேர் தனிமைப்படுத்தலில்..!!!


கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு , 55 பேர் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் குறித்த பெண்ணுக்கு காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதேவேளை அவர் சிகிச்சைகள் பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறும் போது அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அவர் தற்போது ஐ.டி. எச் (IDH) வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணி புரியும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் 40 பேரும் கம்பஹா வைத்தியசாலையில் பணிபுரியும் 15 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்வகையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3395 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்த்ககது.

Previous Post Next Post


Put your ad code here