தேசிய அடையாள அட்டை வழங்கும் அலுவலகம் அடுத்த வாரமும் பூட்டு..!!!


ஆள்பதிவுத் திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் அடுத்த வாரமும் பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை
ஆள்பதிவுத் திணைக்களத்தின் சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியாது.

கொரோனா அபாய நிலையில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஆள்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் கடந்த 3 தினங்கள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அடுத்த வாரம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here