பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் வைத்து குறித்த கடிதம் இன்று (09) மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணையொன்றை ஆரம்பித்து அவரை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news