Friday 9 October 2020

கொரோனா : கட்டுநாயக்காவில் நான்கு ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டன..!!!

SHARE


கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருவதையிட்டு கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் நான்கு ஆடைத்தொழிற்சாலைகளை மூடிவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று  முதல் குறிப்பிட்ட நான்கு ஆடை தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருக்குமென தொழிற்சங்க செயலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நெக்ஸ்ட் ஆடைதொழிற்சாலையின் மேற்பார்வையாளர் ஒருவரும் மற்றுமொரு ஆடை தொழிற்சாலையின் தொழிலாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனரென அவர் குறிப்பிட்டுள்ளார். நான்கு தொழிற்சாலைகளின் ஊழியர்களையும் வீடுகளுக்கு திரும்புமாறும் அல்லது தங்கள் விடுதிகளிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

SHARE