கொழும்பு சென் ஜோசப் கல்லூரி மாணவனின் தந்தைக்கு கொரோனா..!!!


கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் தந்தையொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த நபர் தற்போது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சென் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம் அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.

Previous Post Next Post


Put your ad code here