யாழ்.ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. “ஓட்டுமடம் சுமன்” என பொலிஸாரால் கூறப்படுவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
வாள்கள், கம்பிகளுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும், வீட்டிலிருந்த பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.
நேற்றைய தினம் இணுவிலில் உள்ள ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று ஓட்டுமடம் சுமனின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.