நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 4 வாரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
78 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நாட்டில் கடந்த ஜனவரி முதல் 13 ஆயிரத்து 702 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 ஆயிரத்து 285 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
