மேலும் 2 கொவிட்-19 நோயாளிகள் உயிரிழப்பு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக உயர்வு..!!!


நாட்டில் கொவிட் -19 நோயால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது.

அரசால் இன்று அறிவிக்கப்பட்ட மூன்றாவது கொவிட் -19 நோயாளியின் உயிரிழப்பு இதுவாகும்.

புறக்கோட்டையைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் களனியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவரும் கொவிட் -19 நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்றுப் பரிசோதனையில் கொவிட் -19 நோய் காரணமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 5 வாரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கடந்த ஜனவரி முதல் 14 ஆயிரத்து 715 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 ஆயிரத்து 183 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here