இலங்கையில் கொரோனா தொற்றால் 21ஆவது நபரும் உயிரிழந்துள்ளார்.
வெலிசறை மார்புச் சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று(31) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை நாட்டில் 10 ஆயிரத்து 856 பேர் கோரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 905 பேர் சுகமடைந்துள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
