நாட்டில் மேலும் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று இராணுவத் தளபதி, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து 8 ஆயிரத்து 658 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 12 ஆயிரத்து 400 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
