Saturday 21 November 2020

மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று..!!!

SHARE


நாட்டில் மேலும் 230 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று சனிக்கிழமை இரவு கண்டறியப்பட்டுள்ளது.

அதன்மூலம் நாட்டில் இன்று 487 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 4ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 19 ஆயிரத்து 767 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 590 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE