Saturday 21 November 2020

இலங்கையில் கொரோனாவால் ஒரேநாளில் 09 உயிரிழப்பு..!!!

SHARE


நாட்டில் கொவிட் -19 நோயால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று சனிக்கிழமை  இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒரே நாளில் அதிகளவு கொவிட்-19 உயிரிழப்புகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 6 வாரங்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 19 ஆயிரத்து 767 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 590 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE