இலங்கையில் கொரோனாவால் ஒரேநாளில் 09 உயிரிழப்பு..!!!
நாட்டில் கொவிட் -19 நோயால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் ஒரே நாளில் அதிகளவு கொவிட்-19 உயிரிழப்புகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 6 வாரங்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 19 ஆயிரத்து 767 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 590 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர்.